சென்னைக்கு ஏன் இந்த சோதனை.. ஹைகோர்ட்டில் தீவிபத்து.. நல்லவேளை பேராபத்து இல்லை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனை அருகே உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது. இதில், நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த சில வாரங்களாக சென்னையில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. சென்னை சில்க்ஸ், புதுப்பேட்டை, வல்லூர் அனல்மின் நிலையம் போன்றவற்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திடீர் தீ விபத்து காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications