சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏராளமான பொருட்கள், ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், மீன்வளத் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அலுவலகத்தின் 3வது தளத்தில் உள்ள மீன்வளத் துறையின் நிதி ஆலோசகர் அலுவலகத்தில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதில் அங்கு இருந்த பொருட்கள், கம்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தேனாம்பேட்டை தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு சென்று தீயை முழுமையாக அணைத்தனர். தீ விபத்தின்போது ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications