மயில் அமர்ந்ததால் தீ விபத்து: ரூ. 1 கோடி மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர் நாசம்- 20 கிராமங்களில் மின்தடை
ஈரோடு: ஈரோடு அருகே தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் மயில் அமர்ந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர் எரிந்து நாசமானது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தளவாய்பேட்டையில் மின்தொடர் அமைப்பின் துணை மின் நிலையம் இயக்கி வருகிறது. இங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் இன்று அதிகாலை மயில் ஒன்று அமர்ந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
மள மளவென பற்றிய தீயால் சுமார் 20 அடி உயரத்திற்கு தீச்சுவாலை உண்டானது. இதனால், தளவாய்பேட்டையைச் சுற்றியுள்ள சுமார் 20 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
தவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தீ விபத்துக்கு காரணமான மயிலின் உடலும் மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்த தீ விபத்தில் எரிந்து நாசமான டிரான்ஸ்பார்மரின் மதிப்பு ரூ. 1 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.