Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை வந்தது 2,330 மெட்ரிக் டன் யூரியா உரம்: விவசாயிகள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் எழுந்துள்ள யூரியா உரத் தட்டுபாட்டைப் போக்கும் நடவடிக்கையாக, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் 2,330 மெட்ரிக் டன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மூட்டை ஒன்று ரூ.270-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. மானாவாரி, பாசனக் குளங்களும் நிரம்பி வருகின்றன. இதையடுத்து, பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல், சிறுதானியப் பயிர்களுக்குத் தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

First consignment of urea arrives

85000 ஹெக்டேர் சாகுபடி

இம்மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 85,000 ஹெக்டேர் சாகுபடி செய்யும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கேற்ப சாகுபடிக்குத் தேவையான உரம், பூச்சி மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யூரியா தட்டுப்பாடு

யூரியா தட்டுப்பாடு: திருநெல்வேலி மாவட்டத்தில் 10,370 மெட்ரிக் டன் யூரியா தேவை என்ற நிலையில், 1,000 மெட்ரிக் டன் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இருந்தது. யூரியா உரம் தட்டுப்பாடு எழுந்ததால் தனியார் விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது.

2,800 மெட்ரிக்டன் உரம்

இந்நிலையில், ரயில் மூலம் சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தனியார் விற்பனை நிலையங்களுக்கு 2,800 மெட்ரிக் டன் யூரியா உரம் திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. இதிலிருந்து வேளாண் துறைக்கு 1,000 மெட்ரிக் டன் உரம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

270க்கு விற்பனை

நெல்லை மாவட்டத்தில் உடனடியாகத் தேவையுள்ள சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் யூரியா உரம் மூட்டை ஒன்று ரூ.270-க்கு செவ்வாய்க்கிழமை முதல் (நவம்பர் 11) விற்பனை செய்யப்படுவதாக திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் கூறியுள்ளார்.

குஜராத் உரம்

குஜராத் மாநிலத்திலிருந்து மற்றொரு ரயிலில் 1330.80 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்து கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை இந்த உரமும் மாவட்ட முழுவதும் ஒதுக்கீடு செய்யப்படும்.

கப்பல் மூலம் உரம்

அடுத்த 2 தினங்களில் ஓமன் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 2,800 மெட்ரிக் டன் உரம் கொண்டுவரப்படுகிறது. அடுத்த 2 வாரங்களுக்குத் தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று செ. சந்திரசேகரன் கூறியுள்ளார்.

பதுக்கினால் எச்சரிக்கை:

தனியார் விற்பனையாளர்கள் உரங்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்யக்கூடாது. மேலும், காலாவதியான பூச்சிமருந்துகளை விற்பனை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. அவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் உரம் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், முகவர்கள் விவசாயிகள் பாதிக்கப்படாதவகையில் உரம், பூச்சி மருந்துகளை வேளாண் துறையின் அறிவுரையின்படி விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

திருநெல்வேலிக்கு ரயிலில் வந்துள்ள யூரியா உரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செ. சந்திரசேகரன் கூறினார்.

திருச்சி,புதுக்கோட்டை,கரூர்,அரியலூர்,பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு தேவையான 2300 டன் யூரியா ஓமன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு,காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து திருச்சிக்கு வந்து சேர்ந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+