மதுக் கடைகளை மூடாமல் நிவாரண நிதி கொடுத்தால் சரிப்பட்டு வராது.. முதலில் கடைகளை மூட வேண்டும்
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். அதிலும் ரொக்க உதவியையும் அவர் அறிவித்துள்ளார். ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடாமல் இந்த உதவியை தமிழக அரசு வழங்கினால் அந்த பண உதவி மீண்டும் அரசிடமே செல்லும் அவல நிலையே ஏற்படும்.
கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிகப் பெரிய சேதத்தை சந்தித்துள்ளன.
சென்னையிலும் ஆற்று வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு நேற்று நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.

குடிசைகைள இழந்தோருக்கு
இதில் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ. 10,000 நிவாரணம், நிரந்தர வீடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இதர குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரண உதவியை அரசு அறிவித்துள்ளது.

ஆடு மாடு கோழிகளை இழந்தோருக்கு
அதேபோல ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை இழந்த குடும்பங்களுக்கும் ரொக்க நிவாரண உதவிகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

எமனாக நிற்கும் டாஸ்மாக்
ஆனால் இந்த ரொக்க நிவாரணத்தை கொடுப்பது குறித்து மக்களிடையே குறிப்பாக தாய்மார்களிடையே ஒரு கவலை எழுந்துள்ளது. குடிசைகளில் வசித்து வருவோர் பெரும்பாலும் அன்றாடம் உழைத்துச் சம்பாதிக்கும் ஏழை எளியவர்கள் ஆவர். இவர்களில் பலரும் டாஸ்மாக் கடைகளுக்கு ரெகுலராக போகும் பழக்கம் உடையவர்கள்.

மழைக்காலத்திலும் ஆறாக ஓடிய மது
சென்னையையும், பிற பகுதிகளையும் பெரும் வெள்ளம் புரட்டிப் போட்ட போதிலும் மதுக் கடைகளை மூடவில்லை அரசு. கடைகள் திறந்துதான் இருந்தன. மக்களும் மழையையும் பொருட்படுத்தாமல் குடிக்கத்தான் செய்தனர்.

கடைகளை மூடாவிட்டால்
இப்படிப்பட்ட நிலையில் இப்போது ரொக்க நிவாரணத்தை மக்களின் கையில் கொடுத்தால், குறிப்பாக குடிப்பழக்கம் உள்ள குடும்பத் தலைவர்களிடம் இது போனால் நிச்சயம் அது முழுவதும் அல்லது முக்கால்வாசிப் பணமும் மீண்டும் அரசிடமே செல்லும் - டாஸ்மாக் கடைகள் மூலமாக என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடைகளை மூடுங்கள்
எனவே முதலில் டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாவது மூட வேண்டும். குறைந்தது ஒரு மாதத்திற்கு மூட வேண்டும். அந்தக் காலத்தில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பணம் குடும்பத்துக்குப் போய்ச் சேரும் என்பது மக்களின் கருத்தாகும்.

பொங்கல் முதல் கடைகளை நிரந்தரமாக மூடுங்கள்
மேலும் வருகிற பொங்கள் நாள் முதலாவது டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் அப்பாவி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எங்கே.. மழையிலும் விடாமல் வியாபாரம் பார்த்த அரசாச்சே இது.. அது எங்கே மூடப் போகிறது மதுக் கடைகளை!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications