படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டது கடலோர காவல் படை !
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களின் படகு பழுதாகியதால் கரை திரும்ப முடியாமல் தத்தளித்து மீனவர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் நடுக்கடலில் 14 மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவர் அந்தோனி என்பவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை கரைக்கு கொண்டு வர மற்ற மீனவர்கள் முயன்ற போது துரதிஷ்டவசமாக படகு பழுதானது. அதன் பிறகு கடலோர காவல் மீட்பு படையின் 1093 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் கிடைத்த கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் ஜவகர் தலைமையில் சென்ற மீட்பு படையினர் நடுக் கடலுக்குள் தவித்த மீனவர்களை மீட்டதுடன் பழுதான படகை மற்றொரு படகில் கட்டி இழுத்து வந்து உடல் நல பாதிப்பால் அவதிப்பட்ட அந்தோனியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications