படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டது கடலோர காவல் படை !
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களின் படகு பழுதாகியதால் கரை திரும்ப முடியாமல் தத்தளித்து மீனவர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் நடுக்கடலில் 14 மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவர் அந்தோனி என்பவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை கரைக்கு கொண்டு வர மற்ற மீனவர்கள் முயன்ற போது துரதிஷ்டவசமாக படகு பழுதானது. அதன் பிறகு கடலோர காவல் மீட்பு படையின் 1093 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் கிடைத்த கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் ஜவகர் தலைமையில் சென்ற மீட்பு படையினர் நடுக் கடலுக்குள் தவித்த மீனவர்களை மீட்டதுடன் பழுதான படகை மற்றொரு படகில் கட்டி இழுத்து வந்து உடல் நல பாதிப்பால் அவதிப்பட்ட அந்தோனியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications