கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர்: அமைச்சர் ஜெயக்குமார்
கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் சென்று இருந்தார்கள்.

நாட்டுப்படகு தடை செய்யப்பட நிலையில் விசைப்படகுகளில் சென்று இருந்தார்கள். மொத்தம் 1920 மீனவர்கள் இந்த விழாவிற்கு சென்று இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்கள் பத்திரமாக திரும்பி இருக்கிறார்கள். சென்ற அனைத்து மீனவர்களும் திரும்பி இருக்கிறார்கள்.
இந்த தகவலை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்படுத்தி இருக்கிறார். கச்சத்தீவு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர். 1920 மீனவர்களும் தமிழகம் திரும்பினர் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications