மீன் பிடிக்க 45 நாள் தடை... மீனுக்கு வந்த கிராக்கி.. செம விலையால் மக்கள் அவதி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழகத்தில் மீன் பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளதால் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மீன் விலையும் கடுமையாக அதிகரித்து அசைவப் பிரியர்களை அவஸ்தைக்குள்ளாக்கியுள்ளது.

மீன்பிடி தடை காலம் எதிரொலியாக தமிழகத்தில் மீன்களின் விலை 4.5 சதவீதம் வரை உயர்ந்துளளது. இதனால அசைவ பிரியர்கள் தலையில் கைவை்த்து உட்கார்ந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் இந்த மீன்பிடி தடை அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் வரும் தடை

ஆண்டுதோறும் வரும் தடை

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு தமிழகத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

13 மாவட்டங்களில்

13 மாவட்டங்களில்

அதன்படி தற்போது மீன்பிடி தடை காலம் அமுலில் உள்ளது. இதனால தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் 20 ஆயிரம் விசைப்படகுள் மீன்பிடிக்க செல்லவிலலை.

விசைப் படகுகளுக்குத் தடை

விசைப் படகுகளுக்குத் தடை

பைபர் மற்றும் கட்டு மரங்களில் மட்டும் 20 கிலோ மீட்டர் வரை சென்று மீன்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செல்லும் படகுகளிலும் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்து வருகிறது.

கேரளா, கோவாவிலிருந்து வரும் மீன்கள்

கேரளா, கோவாவிலிருந்து வரும் மீன்கள்

தடை மற்றும் உள்ளூரில் மீன்கள் கிடைக்காததால் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, கோவா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில இருந்து தமிழகத்துக்கு மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வஞ்சரம் செம விலை

வஞ்சரம் செம விலை

சும்மாவே வஞ்சரம் மீன் அதிக விலைக்கு விற்கப்படும். தடைக்கு முன்னர் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.540க்கு விற்கப்பட்டது. தற்போது அது ரூ.680க்கு விற்கப்படுகிறது.

வவ்வால் விலையைப் பாருங்க

வவ்வால் விலையைப் பாருங்க

வவ்வால் ரூ.,380லிருந்து ரூ.430க்கும், சங்கரா ரூ.130லிருந்து ரூ.170க்கும், பாறை ரூ.170லிருந்து ரூ.240க்கும், பிலி ரூ.90லிருந்து ரூ.130க்கும் விற்கப்படுகிறது.

ஹாய் கோழி.. ஹலோ ஆடு...!

ஹாய் கோழி.. ஹலோ ஆடு...!

இதே போல பல்வேறு வகை மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இநத உயர்வை தொடர்ந்து சிக்கன், மட்டன் பக்கம் மீன் பிரியர்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

தடை முடியும் வரை

தடை முடியும் வரை

தடை முடியும் மீன்களின் விலை குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெளி நகரங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுவதால் மீனகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அசைவ பிரியர்கள் தொண்டையில் முள் சிக்கிக் கொண்டதைப் போல அவஸ்தையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+