திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 5பேர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை என்ற இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஒரு காரில் வந்த 4 பேரும், மற்றொரு காரில் வந்த டிரைவரும் பலியாகி உள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணிஇவரது மனைவி குழந்தைகள் அஞ்சலி (3), அஞ்சனா (2) ஆகியவருடன் கோவை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அதே போன்று திருப்பூரில் இருந்து சிவகாசி நோக்கி சுப்பிரமணியன் அவரது மனைவி ருக்மணி அவரது மகன் மணிகண்டன் மனைவி ராதா. இரண்டு குழந்தைகளுடன் காரில் வந்து கொண்டிருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகை என்ற இடத்தில் இரு கார்களும் எதிர்பாராத விதமாக ஒன்றோடொன்று மோதின இந்த விபத்தில் சிவகாசி நோக்கி வந்த காரில் இருந்தவர்கள் சுப்பிரமணியம், ருக்மணி, மணிகண்டன், ராதா, ஆகிய நால்வரும் மற்றொரு காரில் இருந்த சிவசுப்பிரமணியும் உயிரிழந்தனர்.
மேலும், 5 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்பிளிகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.