சேலத்தில் தெருநாய் கடித்ததில் 5 பேர் படுகாயம் – மருத்துவமனையில் அனுமதி!
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் தெருநாய் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தலைவாசல் அருகே, ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி, மீனாட்சி, அங்கமுத்து, முத்துசாமி, மற்றும் சுந்தரம் ஆகிய ஐந்து பேரும் தங்களுடைய வீட்டுக்கு அருகில் காலை 5.30 மணிக்கு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென வெறிபிடித்ததுபோல் இவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக கடித்தது. இதில் அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற இவர்களுக்கு ரேபிஸ் நோய் பரவாமல் இருப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications