மதுரை மாவட்ட கலெக்டர் ஆபீசில் பரபரப்பு.. அமைச்சர் உதயகுமார் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
Recommended Video

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் 5 பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாளை மதுரையில் நடக்கவுள்ள முதல்வரின் நிகழ்ச்சி தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை முடித்து அவர் கிளம்பும் வேளையில், அங்கு வந்த 5 பெண்கள் திடீரென, கையில் கொண்டுவந்திருந்த மண்ணென்ணெயை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், அவர்களைத் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அப்பெண்களைத் தீக்குளிக்கும் முயற்சியில் இருந்து தடுத்தனர்.
இதுதொடர்பாக அந்த பெண்கள் பேசுகையில், தங்களின் மகன்களை போலீஸார் தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்துவருவதாகவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் இரண்டு பேரின் கால்களை உடைத்து போலீஸார் சித்ரவதை செய்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், 5 பேரில் 3 பேரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களை எங்கு வைத்து விசாரணை செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக, அமைச்சர் உதயகுமார் உறுதியளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications