சென்னை-மதுரை விமானத்தில் நடுவானில் விமானம் கோளாறு!
Tamilnadu
oi-Jaya
By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்ற விமானம் நடுவானில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால், 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை மதுரைக்கு தனியார் விமானம் ஒன்று 56 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் உடனடியாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே தரையிறப்பட்டது. இதனால், அதிர்ஷ்டவசமாக 56 பயணிகளும் உயிர் தப்பினர்.
A private plane on Wednesday made an emergency landing at Meenambakkam Airport in Chennai. Officials have confirmed that all 56 passengers onboard the aircraft are safe. The flight was headed to Madurai from Chennai.