தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை நீடிப்பதால் தாமிரபரணியில் தண்ணீர் சீறி பாய்கிறது. இதனால் கரையோர மக்களூக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியை படுத்தி எடுத்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்த தொடர் மழையால் அணைகள், ஏரிகள் பெரும்பாலானவை நிரம்பி வழிகி்ன்றன. இடையில் சில நாட்கள் வெயில் தலை காட்டிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் கனமழை தலை தூக்கியுள்ளது.

நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 141.60 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 147.34 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 116.60 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 82.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 70.86 அடியாகவும் உள்ளது. அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
காலை நிலவரப்படி கடனா நதி அணைப்பகுதியில் 50, பாபநாசம் 45, சேர்வலாறு 23, ராமநதி 25, கருப்பாநதி 15, குண்டாறு 16, நம்பியாறு 12, அடவிநயினார் கோயில் 3, மணிமுத்தாறு 19 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் பாபநாசம் தடுப்பனையான பாபநாசம் தலையணை பகுதியி்ல் இருந்து மட்டும் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் கடனா நதி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் உள்ளிட்ட பிற அணைகளின் தண்ணீரால் தாமிரபரணியில் வெள்ளம் சீறி பாய்கிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் மீண்டும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications