நிரம்பும் பில்லூர் அணை: பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கு- கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
கோவை: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் பவானி ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

மழை காரணமாக 60 அடியாக இருந்த பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 83 அடியாக உயர்ந்தது. இந்தநிலையில் நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இன்று காலை அணையின் நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியை எந்த நேரத்திலும் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றின் இரு கரையோரங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.
இதை அந்த பகுதி மக்களுக்கு தெரிவிக்கும் விதம் தண்டோரா போட்டு பொதுமக்களை பவானி ஆற்றின் கரையோர பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு உடமைகளை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications