குமரி மாவட்டத்தில் பழையாறு உடைந்து, 20 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது #CycloneOckhi
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழையாறு உடைந்து 20 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 4000 மின் கம்பங்கள் சரிந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளம் காரணமாக, சுசீந்திரம், நங்கைநல்லூர், பூதப்பாண்டி உள்ளிட்ட 20 கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி மலையில் பெய்த கன மழையால், அருகாமையில் உள்ள பனகுடி ஊர்ப்பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மண்சரிவு காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 45 செ.மீ, மணிமுத்தாறில் 37 செ.மீ மற்றும் தென்காசியில் 16 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது.