பூக்களின் விலையை தாறுமாறாய் உயர்த்திய ஓணம் பண்டிகையும்...முகூர்த்த தினங்களும்!
கோயம்பேடு: ஓணம் பண்டிகை நெருங்கி வருகின்ற நிலையில் பூக்களின் வரத்து குறைந்ததால் மல்லிகை மற்றும் கனகாம்பரத்தின் விலை தாறுமாறாக ஏறியுள்ளது.
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகிற 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை வரவேற்கும் விதத்தில் கேரள பெண்கள் தங்களது வீட்டு வாசல்களில் 10 நாட்களுக்கு தினமும் அத்தப்பூ கோலம் போடுவார்கள்.

அதே நேரத்தில் ஆடி மாதம் முடிந்து நேற்று முன் தினம் ஆவணி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் திருமண முகூர்த்த நாட்களும் நிறைய வரும். நேற்று ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளாகும்.
பூக்களின் தேவை அதிகரிப்பு:
எப்போதுமே இந்த மாதத்தில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வரத்து குறையும் போது பூக்களின் விலை பல மடங்கு உயரும்.
12 லாரிகளில் மட்டுமே:
இந்த வகையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு இன்று பூக்களின் வரத்து குறைவாகவே இருந்தது. இங்கு 50 லாரிகளில் பூக்கள் வரும். ஆனால் இன்று காலையில் 12 லாரிகள் மட்டுமே வந்துள்ளன.
இருமடங்காக உயர்வு:
இதனால் மல்லிகை, கனகாம்பரம் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிப்பூ இன்று 700 ஆக உயர்ந்துள்ளது. 1 கிலோ கனகாம்பரத்தின் விலை ரூபாய் 450 இல் இருந்து 800 ஆகியுள்ளது.
தாறுமாறாய் உயர்ந்த விலைகள்:
இதே போல 80 ரூபாய்க்கு விற்பனையான சாமந்தி ரூபாய் 180 ஆகவும், ரூபாய் 30 க்கு விற்பனையான கோழிக் கொண்டை பூ ரூபாய் 60 ஆகவும் உயர்ந்துள்ளது. முல்லை ரூபாய் 70 இல் இருந்து ரூபாய் 150 ஆகவும், ரோஸ் ரூபாய் 80ல் இருந்து ரூபாய் 120 ஆகவும், சம்மங்கி ரூபாய் 90 இல் இருந்து 240 ஆகவும் கூடியுள்ளது. ரூபாய் 70க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு அரளிப்பூவின் விலை 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் பூக்கள் விலை:
பூக்களின் விலை அதிகரித்துள்ளதால், திருமணத்துக்கான பூ அலங்கார பணிகளுக்கான செலவும் அதிகரிக்கும். உதாரணத்துக்கு ரூபாய் 35 ஆயிரம் மதிப்பிலான பூக்களை கொண்டு செய்து முடிக்கப்படும் அலங்கார பணிகளுக்கான செலவுக்கு ரூபாய் 70 ஆயிரம் ஆகும் என்று பூ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
இனிமே இப்படித்தான்:
இந்த மாதம் முழுவதுமே திருமண முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதாலும், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியிருப்பதாலும் வரும் நாட்களில் இந்த விலை உயர்வு இன்னும் அதிகமாகும் என்றே வியாபாரிகள் தெரிவித்தனர்.
-
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக












Click it and Unblock the Notifications