அந்த முடிவால் பொருளாதாரமே போச்சு.. எங்களிடம் ஆலோசித்திருக்க வேண்டும் : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
புதுக்கோட்டை : 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததோடு ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மே மாதம் 23 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிதித்துறை சார்ந்து முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன்பு மத்திய அரசு மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும், 2016ல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியபொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்போதும் திமுக அந்த நடவடிக்கையை எதிர்த்திருக்கிறது.
எனவே, ஒரு முடிவு எடுக்கும்போதும், வருங்காலத்தில் இது போன்ற முடிவு எடுக்க நேர்ந்தாலும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசிப்பது முறையாக இருக்கும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
வங்கி நம்பரை மாற்றாமலேயே வங்கியை மாற்றி கொள்ளலாம்.. ரிசர்வ் வங்கி கொண்டு வரும் முக்கிய விதி -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்!












Click it and Unblock the Notifications