விதம் விதமான சாப்பாடு.. பிரமிக்க வைத்த காரைக்குடி உணவுத் திருவிழா!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா இன்று ( 31.08.2016) பிரமிக்கத்தக்க வகையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறைத்தலைவர் பேராசிரியர்.முனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார்.

கவிதா நர்சிங் ஹோம் உரிமையாளர் டாக்டர் ரமேஷ் உணவுத் திருவிழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். காரைக்குடி இராமநாதன் பிக்சர்ஸ் வி.ஆர். இராமநாதன், காரைக்குடி சபரி டிராவல்ஸ், உரிமையாளர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழுத் தலைவர் பேராசிரியர் முனைவர். நாகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் அழகு சுந்தரி கிராம கல்வி குழுத் தலைவர் ஆறுமுகம் மற்றும் டேசொட்டா பேக்கரி உரிமையாளர் காளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

மாணவர்கள் இவ்வுணவுத் திருவிழாவில் கேழ்வரகு, திணை,கோதுமை, சோளம், சாமை, கம்பு போன்ற தானிய வகைகளில் கூழ், தோசை, பூரி, லட்டு, புட்டு, இட்லி, பக்கோடா, சேமியா, சாதம், பஞ்சரத்தின தோசை ஆகிய உணவு வகைகளையும், வாழைப்பூ, காரட், பீட்ரூட் காய்கறிகளில் செய்த வடை, பால்கோவா, உருளையில் க்லோப்ஜாமுன் போன்றவைகளையும், மருத்துவக் குணங்கள் நிறைந்த தூதுவளை, முள்ளுமுருங்கை, கற்பூரவள்ளி, கற்றாழை, முடக்கத்தான் போன்றவற்றிலிருந்து லேகியம், தோசை, ஜுஸ் ஆகியவற்றையும், வாழைப்பழம், மாதுளம் பழம், திராட்சை போன்ற பழங்களை கொண்டு சாலட், ஜூஸ், அல்வா உணவு வகைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இவ் விழாவில் பங்கேற்றனர். ஆறாம் வகுப்பில் என். சக்திவேல், ஏழாம் வகுப்பில் ஏ. பாஸ்டின், எட்டாம் வகுப்பில் பி. சுஜித்ரா, ஒன்பதாம் வகுப்பில் ஷாஜி முகமது முதலிடம் பெற்றனர். தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கட்டிட ஒப்பந்தக்காரர் செந்தில்குமார், டிசோட்டா பேக்கரி உரிமையாளர் காளீஸ்வரன், தன்னம்பிக்கை பயிற்சியாளர் வினைத்தீர்த்தான் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

உணவுத் திருவிழாவின் நடுவர்களாக கோட்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கே. எஸ். சோபனா, அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கே. சுசீலா ராணி, காரைக்குடி எஸ். எம். எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் புவனேஸ்வரி செயல்பட்டனர். பட்டதாரி ஆசிரியர் எஸ். விஜயலெட்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி கோமதி மற்றும் பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications