சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்ட நாள் இன்று!
சந்தனக் கடத்தல் வீரப்பன் 2004-ம் ஆண்டு இதே அக்டோபர் 18-ந் தேதி அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை: தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் கட்டற்ற ராஜாவாக வலம் வந்தவர் 'சந்தன மரக் கடத்தல் மன்னன்' என அழைக்கப்பட்ட வீரப்பன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலம் வனப்பகுதியை மையமாக கொண்டு தனி ராஜ்ஜியமே நடத்திய வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் அக்டோபர் 18.
1952-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி பிறந்த வீரப்பன் 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வரலாற்று விநோதம்தான். 1972-ம் ஆண்டு சந்தன மரக் கடத்தலுக்காக முதன் முதலில் வீரப்பன் கைது செய்யப்படுகிறார்.
வீரப்பனை நாடறிய செய்தது தமிழக போலீஸ் அதிகாரி சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கொலை செய்த சம்பவம். அதேபோல் 1991-ல் சீனிவாஸ், ஹரிகிருஷ்ணா என அடுத்தடுத்த வனத்துறை அதிகாரிகள் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர்.

தமிழக, கர்நாடகா அதிரடிப்படைகள்
இதன்பின்னர் வீரப்பனை கைது செய்ய அதிரடிப்படையை அமைத்தது தமிழக அரசு. கர்நாடகா அரசும் வீரப்பனை பிடிக்க அதிரடிப்படையை உருவாக்கியது.

அதிரடிப்படை அட்டூழியம்
இரு மாநில அதிரடிப்படைகளும் கூட்டாக பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தேடுதல் வேட்டையை நடத்தின. இந்த தேடுதல் நடவடிக்கையில் அப்பாவி மலைவாழ் மக்கள் பலரும் நாசமாக்கப்பட்டனர். தமிழக வனத்துறையின் வரலாற்றில் கருப்பு அத்தியாயமாகிப் போன வாச்சத்தி பலாத்கார சம்பவமும் இந்த கால கட்டத்தில்தான் நிகழ்ந்தது.

வீரப்பன் கேசட்
ஆனால் வீரப்பன் சிக்கவே இல்லை. சந்தன மரக் கடத்தல், யானை தந்தம் கடத்தல் ஆகிய சட்டவிரோதங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வீரப்பன் ஆட் கடத்தல் எனும் அடுத்த படியையும் தொட்டார். தமக்கு வேண்டியது கிடைக்க அப்போது கடத்தப்பட்ட உறவினர்களுக்கு கேசட் மூலமாக நிபந்தனைகளை அனுப்புவது வீரப்பன் பாணி. தமக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பிணைக் கைதியை பாதுகாப்பாக அனுப்புவதும் வீரப்பன் பாணி.

தமிழ்த் தேசிய இயக்கங்கள்
தமிழகம், கர்நாடகா அரசுகளால் எட்ட முடியாத வீரப்பனை நக்கீரன் பத்திரிகை நேரில் சந்தித்தது. நக்கீரன் ஆசிரியர் கோபால், வீரப்பனை சந்தித்து எடுத்த வீடியோ பேட்டிகள் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பெரும் பரபரப்பை கிளப்பின. ஒரு கட்டத்தில் தனித் தமிழ்நாடு கோரி ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு வீரப்பன் அடைக்கலமும் கொடுத்தார்.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்
அப்போதுதான் கன்னட சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தினார். தமிழ்த் தேசிய கோரிக்கைகளுக்காக ராஜ்குமாரை கடத்தியதாகவும் அறிவித்தார் வீரப்பன். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ராஜ்குமார் கடத்தல் சம்பவம்.

ராஜ்குமாரை விடுவிக்க கோரிக்கைகள்
108 நாட்கள் ராஜ்குமாரை தம் வசம் பிணைக் கைதியாக வைத்திருந்தார் வீரப்பன். முதலில் நக்கீரன் ஆசிரியர் கோபால், பின்னர் பழ. நெடுமாறன் தலைமையிலான குழு, கொளத்தூர் மணியின் முயற்சிகள் என ராஜ்குமாரை மீட்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமது சில கோரிக்கைகள் நிறைவேறிய நிலையில் ராஜ்குமாரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார் வீரப்பன்.

வீரப்பன் சுட்டுக் கொலை
பின்னர் 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதியன்று வீரப்பனும் அவரது கூட்டாளிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் அறிவித்தார். வீரப்பன் சகாப்தம் முடித்துவைக்கப்பட்டதற்காக அதிரடிப்படையினருக்கு தமிழக அரசு பரிசுகளை அள்ளித் தந்து மகிழ்ச்சியடைந்தது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications