நினைவு நாளில் வீரப்பன் போட்டோவுடன் கட்-அவுட்.. முத்துலட்சுமி மீது போலீஸ் வழக்கு
தர்மபுரி: சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் 11வது நினைவு தினத்தையொட்டி, அவரது போட்டோவுடன் கட்-அவுட் வைத்த மனைவி முத்துலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சந்தன கடத்தல் வீரப்பன், தமிழக அதிரடிப் படை போலீசாரால் 11வருடங்களுக்கு முன்பு அக்டோபர் 18ம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்டார். வீரப்பனின் 11வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், அன்னதானம் நடத்த அனுமதி தருமாறு கொளத்தூர் காவல் நிலையத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோரிக்கைவிடுத்திருந்தார். இக்கோரிக்கையை போலீசார் ஏற்க மறுத்ததை தொடர்ந்து ஹைகோர்ட்டை அணுகினார் முத்துலட்சுமி.

முத்துலட்சுமி கோரிக்கையை ஏற்ற ஹைகோர்ட், அன்னதானம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று வீரப்பனின் 11வது நினைவுதினத்தை அவரது குடும்பத்தார் அனுசரித்தனர். வீரப்பன் நினைவிடத்துக்கு, குடும்பத்தாருடன் சென்று முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே வீரப்பன் போட்டோவுடன், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முத்துலட்சுமி கட்-அவுட்டுகள் வைக்க ஏற்பாடு செய்திருந்ததாக தெரிகிறது. மாவட்ட நிர்வாகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கொளத்தூர் போலீசார், முத்துலட்சுமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அன்னதானம் நடத்த மட்டுமே கோர்ட் அனுமதி கொடுத்த நிலையில், போலீஸ் அனுமதி தராமல், சட்டத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபருக்கு கட்-அவுட் வைத்தது தவறு என காவல்துறை கூறுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications