சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கோர்ட்டில் ஆஜர்!
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அறிவொளி, விசாரணையை வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் எ.வ.வேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications