முன்னாள் அமைச்சர் பிரபு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை: கோயம்புத்தூரில் உள்ள காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரபுவின் அலுவலகத்தில் பெற்றோர் குண்டு வீசப்பட்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கோவை ரேஸ்கோர்சில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு வீடு உள்ளது. இதன் அருகே அலுவலகமும் உள்ளது. அலுவலகத்தில் மகாராஜன் என்ற காவலாளி இரவுப் பணியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம மனிதர்கள் பிரபுவின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
அந்த பெட்ரோல் குண்டு அலுவலகத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி அருகே விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவங்கள் எதுவும் அங்கு பணியில் இருந்த காவலாளிக்கு தெரியவில்லை. பிரபு அலுவலகம் எதிரேதான் கோவை மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கு காவல் பணியில் இருந்த போலீஸ்காரர் எதேச்சையாக எதிரே பார்த்த போது தீப்பிடித்து எரிவது தெரியவந்தது. உடனே அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications