Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுநீர் கழிக்கப் போன மாற்றுத்திறனாளியை ஆடு திருடன் என்று தாக்கிய 4 பேர்- கைது!

Subscribe to Oneindia Tamil

முசிறி: முசிறியில் இரவு நேரத்தில் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை ஆடு திருடன் என்று 4 பேர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் வசிப்பவர் பாலகுமார். இவர் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார்.

இயற்கை உபாதை:

கடந்த மூன்றாம் தேதி இரவு தும்பலத்தில் உள்ள வங்கியின் பின்புறம் வயல்வெளியில் இயற்கை உபாதையை கழிக்க இருட்டான பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அடித்து உதைத்த ஊர்க்காரர்கள்:

அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த நடராஜன் , மணி , மனோகரன் மற்றும் சேகர் ஆகியோர் பாலகுமாரை ஆடு திருட வந்ததாக நினைத்து அசிங்கமாக திட்டியும், அடித்து உதைத்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை:

இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பால குமார் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

நான்கு பேர் கைது:

இது பற்றி பாலகுமார் முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலகுமாரை தாக்கிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆடு திருடனாக நினைத்து தாக்குதல்:

ஊனமுற்ற இளைஞரை ஆடு திருட வந்ததாக நினைத்து தாக்கிய சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+