அரக்கோணத்தில் 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
அரக்கோணம்: அரக்கோணத்தில் 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அருகே ராமாபுரத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் இன்று கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மாணவிகளின் உடல்களை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். முதலில் தீபா என்ற மாணவியின் உடல் மீட்கப்பட்டது.
அதன்பின் ரேவதி, சங்கரி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டது. மீதம் இருந்த ஒரு மாணவியின் உடலை தேடும் பணி நீண்ட நேரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது அவரது உடலும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications