இம்மாத இறுதிக்குள் சென்னையில் மீண்டும் பாக்ஸ்கான் நிறுவனம் திறப்பு.. அமைச்சர் சம்பத் தகவல்
சென்னை: மூடப்பட்ட பாக்ஸ்கான் தொழிற்சாலை சென்னையில் இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்பட உள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
தைவானை சேர்ந்த செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் "பாக்ஸ்கான்". இதன் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்தது.
இந்த தொழிற்சாலை கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையில் நிரந்தரமாகவும், ஒப்பந்த முறையிலும், பயிற்சி தொழிலாளர்களாகவும் 8000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

செட்டில்மென்ட்
இதில் முதலிலேயே, 6400 பணியாளர்கள் வேலையை இழந்த நிலையில் எஞ்சியிருந்த சுமார் 1500 தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை நிறுவனம் வழங்கியது.

நோக்கியாவை தொடர்ந்து
அந்த ஆலை மூடப்படும் சில காலங்கள் முன்புதான், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா செல்போன் ஆலையும் மூடப்பட்டிருந்தது. இதனால் தமிழக தொழில்துறையினர், தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாக்ஸ்கான் மீண்டும் வந்தது
இந்நிலையில் பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் இம்மாத தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை
இதுகுறித்து சம்பத் கூறுகையில், தமிழக அரசு அதிகாரிகள் குழு சமீபத்தில் தைவான் சென்று பாக்ஸ்கான் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதால் மீண்டும் ஆலை திறக்கப்பட உள்ளது.

இம்மாத இறுதிக்குள்
இம்மாதம் இறுதிக்குள் பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் திறக்கப்படும். ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா தொழிற்சாலை இருந்த பகுதியில் பாக்ஸ்கான் நிறுவனம் செயல்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications