இம்மாத இறுதிக்குள் சென்னையில் மீண்டும் பாக்ஸ்கான் நிறுவனம் திறப்பு.. அமைச்சர் சம்பத் தகவல்
சென்னை: மூடப்பட்ட பாக்ஸ்கான் தொழிற்சாலை சென்னையில் இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்பட உள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
தைவானை சேர்ந்த செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் "பாக்ஸ்கான்". இதன் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்தது.
இந்த தொழிற்சாலை கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையில் நிரந்தரமாகவும், ஒப்பந்த முறையிலும், பயிற்சி தொழிலாளர்களாகவும் 8000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

செட்டில்மென்ட்
இதில் முதலிலேயே, 6400 பணியாளர்கள் வேலையை இழந்த நிலையில் எஞ்சியிருந்த சுமார் 1500 தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை நிறுவனம் வழங்கியது.

நோக்கியாவை தொடர்ந்து
அந்த ஆலை மூடப்படும் சில காலங்கள் முன்புதான், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா செல்போன் ஆலையும் மூடப்பட்டிருந்தது. இதனால் தமிழக தொழில்துறையினர், தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாக்ஸ்கான் மீண்டும் வந்தது
இந்நிலையில் பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் இம்மாத தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை
இதுகுறித்து சம்பத் கூறுகையில், தமிழக அரசு அதிகாரிகள் குழு சமீபத்தில் தைவான் சென்று பாக்ஸ்கான் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதால் மீண்டும் ஆலை திறக்கப்பட உள்ளது.

இம்மாத இறுதிக்குள்
இம்மாதம் இறுதிக்குள் பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் திறக்கப்படும். ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா தொழிற்சாலை இருந்த பகுதியில் பாக்ஸ்கான் நிறுவனம் செயல்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications