அக்டோபர் 1 முதல் அப்பல்லோவில் இருந்த ஜெ.வை பார்க்க சசிகலாவுக்கே அனுமதி இல்லை- தினகரன்

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அப்பல்லோவில் இருந்த ஜெயலலிதாவை பார்ப்பதற்கு எனது சித்தி சசிகலாவையே அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

கூர்க்: கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அப்பல்லோவில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அதிமுகவில் எடப்பாடி தரப்புக்கும், தினகரன் தரப்புக்கும் இடையே முட்டல் மோதல்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இருதரப்பைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசி வருகின்றனர்.

From Oct 1st onwards Sasikala was not allowed to see Jayalalitha,says TTV Dinakaran

இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டங்களில் பேசி வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ஜெயலலிதா சசிகலா குடும்பத்தினரால் கொல்லப்பட்டு விட்டார். ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, எதையும் சாப்பிடவில்லை.

ஜெயலலிதாவை பார்த்தால் அவர் கொல்லப்படும் ரகசியத்தை கூறிவிடுவார் என்பதால் அவரை பார்ப்பதற்கு சசிகலா குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் கூறியதைதான் அமைச்சர்களாகிய நாங்கள் கூறினோம். பொய் கூறியதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து கூர்கில் டிடிவி தினகரன் கூறுகையில், திண்டுக்கல் சீனிவாசன் இன்று பதவி கிடைத்து விட்ட சுகத்தில் ஏதேதோ பேசி வருகிறார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ என்னிடம் உள்ளது. சசிகலா சரி என்று கூறினால் நான் வெளியிட தயார்.

ஜெயலலிதாவை சந்தித்தால் நோய்தொற்று ஏற்படும் என்றால் சசிகலாவுக்கு மட்டும் ஏற்படாதா என்று அமைச்சர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உண்மையை சொல்ல போனால், ஜெயலலிதாவை சந்திக்க எனது சித்தி சசிகலாவையே கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+