எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. அமைச்சர்களுக்கு எடப்பாடி அட்வைஸ்!
எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் இந்த அட்வஸை வழங்கியுள்ளனார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எம்எல்ஏக்கள் கடந்த வாரம் முதல் அணி அணியாக சந்தித்து வந்தனர். எம்எல்ஏக்கள் சிலர் அமைச்சர் பதவி கேட்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு முடங்கி இருப்பதை சரி செய்வது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்துறை சார்ந்த பிரச்சனைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications