இலங்கை கடற்படையால் 33 தமிழக மீனவர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்!
Subscribe to Oneindia Tamil
ஆம்பூர்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று காலை ஆம்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் திருமணத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்றது வருத்தமளிக்கிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 33 பேரை சிறை பிடித்துள்ளனர்.
அவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்












Click it and Unblock the Notifications