மக்களுக்காக சுதந்திர தினத்தன்று மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: சுதந்திர தினத்தில் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. மாநில மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவி மகேஸ்வரி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் மகளிர் அணியின் தீர்மானத்தை வெளியிட்டு பேசிய வாசன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இனியும் அரசு மவுனம் காக்கக்கூடாது.
மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டத்தில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்து உள்ளது. இதற்கு காரணம் தொழிலாளர்கள் நலன் கருதி மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
உடனடியாக பிரதமர் தலையிட்டு சம்பந்தப்பட்ட துறை மந்திரியை தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச வைக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்கும். வாழ்வாதாரத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
தேர்தலை நோக்கி த.மா.கா. பயணித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.
மதுவுக்கு எதிராக மாணவர்கள் நியாயமான முறையில் போராடி வருவதை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய தமிழகம் நலன்சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு கிடப்பில் போடாமல் நிறைவேற்ற வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் சாருபாலா தொண்டைமான் முன்னாள் எம்.பி.ராணி, மாதவி, மாநில துணை தலைவர் கிளாடிஸ் லில்லி, மைதிலி தேவி, கவுரிகோபால், நந்தினி, உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications