வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: நாட்டில் அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளைச்சல் குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் வெங்காயம் வாங்குவதை தவிர்க்கிறார்கள்.

மக்கள் உணவிற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருளை வாங்குவதற்கு முடியாத சூழல் உருவாகாமல் இருப்பதற்கு அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
மேலும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மக்களின் அடிப்படை தேவையான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விவசாய விளைபொருட்கள் நியாயமான விலையில், தேவையான அளவில் மக்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்கள் நலன் காக்கவேண்டும் " என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications