கல்விக் கடன் திருப்பி செலுத்தாவிடில் வங்கித் தேர்வில் பங்கேற்க தடையா? - ஜி.ரா கண்டனம்
சென்னை: மாணவர்கள் வங்கிக் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக வங்கித் தேர்வில் பங்கேற்க தடை விதிப்பதா என்று ஸ்டேட் பேங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரத ஸ்டேட் வங்கியின் 17 ஆயிரத்து 140 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலம் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகளில் கடன் பெற்ற மாணவர்கள் அதை திரும்ப செலுத்தவில்லையென்றால், விண்ணப்பிக்க தகுதியில்லை என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது கல்விக் கடன் பெற்ற மாணவர்களை தேர்வு எழுத தடுக்கும் வகையில் போடப்பட்ட உத்தரவாகும். பாரத ஸ்டேட் வங்கியின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கல்வி பயில மாணவர்கள் வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் பணிக்குச் சென்றால் தான் அதை திருப்பிச் செலுத்த இயலும். ஆனால் வேலை கிடைக்கவில்லையென்றாலும் கடைசி தவணை முடிந்த ஒருவருட காலத்திற்கு பிறகு வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்தவேண்டும் என வங்கி நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன.
இந்த நிலையில் மேலும் ஒரு தாக்குதலாக வங்கிக் கடன் பெற்று செலுத்தாத மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பபை மறுப்பதோடு அவர்களை கடனாளியாக்குவதுடன் அவர்கள் மீது கடன் சுமையை ஏற்றி விடுகிறது. மற்றொருபுறம் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை மறுப்பதால் வங்கிகளுக்கும் கடன் சுமை கூடுகிறது.
மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டியை மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் மானியமாக வழங்குகிறது. இந்தத் தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை என்றாலும் கூட மாணவர்கள் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுத்தப்படுகிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் சமம் என்பதற்கு இந்த உத்தரவு முற்றிலும் எதிரானதாகும். எனவே இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஸ்டேட் வங்கியின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டுமெனவும், அனைவரும் தேர்வு எழுதும் வண்ணம், தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கும் கடைசி தேதியான ஏப்ரல் 25 ஆம் தேதியை நீட்டித்து உத்தரவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications