கல்விக் கடன் திருப்பி செலுத்தாவிடில் வங்கித் தேர்வில் பங்கேற்க தடையா? - ஜி.ரா கண்டனம்
சென்னை: மாணவர்கள் வங்கிக் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக வங்கித் தேர்வில் பங்கேற்க தடை விதிப்பதா என்று ஸ்டேட் பேங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரத ஸ்டேட் வங்கியின் 17 ஆயிரத்து 140 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலம் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகளில் கடன் பெற்ற மாணவர்கள் அதை திரும்ப செலுத்தவில்லையென்றால், விண்ணப்பிக்க தகுதியில்லை என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது கல்விக் கடன் பெற்ற மாணவர்களை தேர்வு எழுத தடுக்கும் வகையில் போடப்பட்ட உத்தரவாகும். பாரத ஸ்டேட் வங்கியின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கல்வி பயில மாணவர்கள் வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் பணிக்குச் சென்றால் தான் அதை திருப்பிச் செலுத்த இயலும். ஆனால் வேலை கிடைக்கவில்லையென்றாலும் கடைசி தவணை முடிந்த ஒருவருட காலத்திற்கு பிறகு வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்தவேண்டும் என வங்கி நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன.
இந்த நிலையில் மேலும் ஒரு தாக்குதலாக வங்கிக் கடன் பெற்று செலுத்தாத மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பபை மறுப்பதோடு அவர்களை கடனாளியாக்குவதுடன் அவர்கள் மீது கடன் சுமையை ஏற்றி விடுகிறது. மற்றொருபுறம் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை மறுப்பதால் வங்கிகளுக்கும் கடன் சுமை கூடுகிறது.
மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டியை மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் மானியமாக வழங்குகிறது. இந்தத் தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை என்றாலும் கூட மாணவர்கள் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுத்தப்படுகிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் சமம் என்பதற்கு இந்த உத்தரவு முற்றிலும் எதிரானதாகும். எனவே இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஸ்டேட் வங்கியின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டுமெனவும், அனைவரும் தேர்வு எழுதும் வண்ணம், தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கும் கடைசி தேதியான ஏப்ரல் 25 ஆம் தேதியை நீட்டித்து உத்தரவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
தபால் நிலையங்கள் கடனே தராமல் சேமிப்புக்கு எப்படி வட்டி தருகின்றன.. சுவாஸ்யமான உண்மை -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
வங்கி லாக்கரில் தங்கம் உள்பட எது இருந்தாலும்.. 100 மடங்கு இழப்பு ஏன்.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications