18வது நாளாக தொடரும் நெடுவாசல் போராட்டம்… ஜிவி பிரகாஷ், கரு. பழனியப்பன் நேரில் சென்று ஆதரவு
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களை திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், இயக்குனர் கரு. பழனியப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
புதுக்கோட்டை: நெடுவாசல் போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் அனுமதி அளித்தது.
இந்தத் திட்டத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரி நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ந்து 18 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கட்சித் தலைவர்கள் ஆதரவு
இந்தப் போராட்டத்திற்கு, எதிர்க்கட்சித் தலைரான மு.க. ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் விவசாயி அமைப்பினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

முதல்வர் வேண்டுகோள்..
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தீர்மானமான போராட்டம்
மாநில அரசு சொன்னாலும், மத்திய அரசு உறுதியான அறிவிப்பை வெளியிட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் உறுதியாய் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆட்சியர் அளவிலான பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.

திரையுலகினர் ஆதரவு
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 18வது நாளாக தொடரும் இந்தப் போராட்டத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் கரு. பழனியப்பன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஜிவி
ஜிவி பிரகாஷ், ஏற்கனவே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது களத்தில் மாணவர்களோடு நின்று ஆதரவு தெரிவித்தார். அதனைப் போன்றே தற்போது தமிழர்களின் மற்றொரு பிரச்சனையான நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications