'தப்பித்தது தமிழ்நாடு'.. சசிகலாவிற்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டது நீதித்துறை.. கங்கை அமரன் வரவேற்ப
தப்பித்தது தமிழ்நாடு என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். சசிகலாவிற்கு செய்ய வேண்டியதை நீதித்துறை செய்துவிட்டது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இசையமைப்பாளர் கங்கை அமரன் வரவேற்றுள்ளார்.
21 ஆண்டுகளாக நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இசையமைப்பாளர் கங்கை அமரன் வரவேற்றுள்ளார். இவருடைய பையனூர் பங்களாவை ஜெயலலிதா மற்றும் சசிகலா பலவந்தமாக பிடிங்கி பறித்துள்ள நிலையில், தப்பித்தது தமிழ்நாடு என்று கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தப்பித்தது தமிழ்நாடு
மேலும், கொஞ்சநாள் தான் பொறுப்போம் பின்னர் செய்ய வேண்டியதை செய்வோம் என்று சசிகலா கூறியதற்கு நீதித்துறையே சசிகலா விஷயத்தில் செய்ய வேண்டியதை செய்துவிட்டது என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு
ஏற்கனவே, சசிகலாவை எவரும் எதிர்க்க முன்வராத போது பன்னீர்செல்வத்தின் முடிவு துணிச்சலானது என்றும் பொதுமக்களின் மனங்களில் ஓடிய பிம்பங்களை தான் பன்னீர்செல்வம் பிரதிபலித்திருக்கிறார் என்றும் கங்கை அமரன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

பையனூர் பங்களா
கங்கை அமரனுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை மிரட்டி ஜெயலலிதா வாங்கினார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதே போன்று பல பணக்காரர்களின் சொத்துக்களையும் மிரட்டி வாங்கிய ஜெயலலிதா மற்றும் சசிகலா கும்பலை தொடர்ந்து அவர் எதிர்த்து வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொண்டர்களை சந்திக்காமலேயே கட்சி பொறுப்பையும், ஆட்சியையும் கைப்பற்ற முயலுவது எந்த விதத்தில் நியாயம் என்று சசிகலா நோக்கி கங்கை அமரன் கேள்வி எழுப்பி இருந்தார்.

வரவேற்பு
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கங்கை அமரன் வரவேற்றுள்ளார். மேலும், நீதித்துறை சசிகலாவிற்கு செய்ய வேண்டியதை செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications