‘GETHU’ என்பதில் ‘கெ’ உச்சரிப்பு வராததால் வரிவிலக்கு தரவில்லை: அரசு தரப்பில் விளக்கம்
சென்னை: ‘GETHU' என்பதில் ‘கெ' உச்சரிப்பு வராததால் வரிவிலக்கு தரவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிஸ்டாலின் நடித்து, தயாரித்து பொங்கலை யொட்டி வெளி வந்துள்ள படம் ‘கெத்து'. இப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்கவில்லை. இதையடுத்து, உதயநிதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், வரிவிலக்கு கோரும் விண்ணப்பத்தில் ‘GETHU' (கெத்து ) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘GETHU' என்பதில் ‘கெ' உச்சரிப்பு வராததால் வரிவிலக்கு தரவில்லை. 'KETHU' என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்திருந்தால் வரிவிலக்கு தரப்பட்டிருக்கும்'' என்று தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நூதன விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, தமிழில் வரும் உச்சரிப்பைத்தானே கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கில எழுத்து எப்படி இருந்தால் என்ன என உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார். நீதிபதியின் இந்த கேள்விக்கு நாளை பதில் அளிப்பதாக அரசுத்தரப்பு விளக்கம் அளித்தது.












Click it and Unblock the Notifications