ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய 20 அடி திமிங்கலம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பெரிய திமிங்கலம் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபத்தில் தெற்கு கடற்கரையில் இன்று பெரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 20 அடி நீளமும், 15 டன் எடையும் கொண்ட அந்த திமிங்கலம் கரை ஒதுங்கியதைப் பார்த்த மீனவர்கள் அதன் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது தான் திமிங்கலம் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே மீனவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்த உடன் வனத்துறையினர் கடற்கரைக்கு வந்து திமிங்கலத்தை பார்த்தனர்.
அவர் திமிங்கலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனை செய்தனர். திமிங்கலம் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பரிசோதனைக்கு பிறகு திமிங்கலம் கடற்கரையிலேயே புதைக்கப்பட்டது.
திமிங்கலத்தை புதைக்க அதிகாரிகளுக்கு உள்ளூர் மீனவர்கள் உதவி செய்தனர்.












Click it and Unblock the Notifications