அப்பா என்கிட்ட தவறா நடந்துக்கல- அப்படி சொல்லச் சொன்னதால சொன்னேன்...ஆட்சியரிடம் கெஞ்சும் சிறுமி!
சேலம் வாழப்படியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தன்னிடம் முறை தவறி நடந்துகொண்டார் என கூறியதால் அவரது அப்பா சிறைக்குச் சென்றார். இப்போது அப்பா அப்படி நடந்துகொள்ளவில்லை என ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
சேலம்: சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தந்தை மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெறுகிறேன்; சிறுவர் சீர்திருந்த்தப்பள்ளி நிர்வாகி சொன்னதன் பேரிலேயே தந்தை மீது குற்றம் சுமத்தினேன் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன், கலா தம்பதியினர். இவர்களின் மகள் ஆர்த்தி. சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி தன் தோழிகளுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

ஊட்டியில்...
அவரை பல நாட்கள் தேடி வந்த போலீசார் அவர் ஊட்டியில் இருக்கும் செய்தியை அறிந்து அங்கிருந்து சேலத்துக்கு அழைத்து வந்தனர். பிறகு அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
தவறாக நடந்துகொண்டார்கள்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் தந்தையும் சித்தப்பா கண்ணனும் தன்னிடம் தவறாக நடந்துகொண்டனர். அதனால்தான் வீட்டை விட்டு வெளியே போனேன் என கூறியுள்ளார்.
சீர்திருத்தப்பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்களே
ஆனால், தற்போது நான் அவ்வாறு கூறவில்லை. அப்பா மீது பாலியல் புகார் கூறினால் தான் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து வெளியே போக முடியும் என அங்கிருந்த நிர்வாகி கூறினார். அதனால்தான் அப்படி கூறினேன்.
என்ன காரணம்?
ஆனால் அப்பாவும் சித்தப்பாவும் எந்த தவறும் செய்யவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் ஆர்த்தி மனு கொடுத்துள்ளார். ஆர்த்தி தந்தை மற்றும் சித்தப்பா மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரின்பேரில் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினர் கட்டாயத்தால் இப்போது பிறழ்ந்து பேசுகிறாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications