'காந்த கண்ணழகி' சில்க் ஸ்மிதா மறைந்த 21வது நினைவுதினம் இன்று!

1980களில் திரைத்துறை ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த சில்க் ஸ்மிதா மர்மமான முறையில் மரணமடைந்து இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை : காந்த விழிக் கண்களால் கவர்ச்சி ரசத்தை வழிய விட்டு திரைத்துறை ரசிகர்களின் கனவுக் கண்ணியாக வலம் வந்த சில்க் ஸ்மிதா மர்ம மரணமடைந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

சில்க் ஸ்மிதா என்று அனைவராலும் அறியப்படும் கவர்ச்சி நடிகை ஆந்திர மாநிலம் ஏலூருவில் 1960ம் ஆண்டு பிறந்தவர். சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. இவருடைய குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததால் தன்னுடைய பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார்.

இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால் பெற்றோர் அவருக்கு சிறு வயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.

 வினுசக்கரவர்த்தியால் அறிமுகமானவர்

வினுசக்கரவர்த்தியால் அறிமுகமானவர்

திரைப்படத் துறையில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய விஜயலட்சுமியை தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி திரைத்துறைக்கு அறிமுகம் செய்தார். வண்டிச்சக்கரம் என்ற தமிழ் திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ் திரைப்படத்துறையில் புகழையும் தேடிக்கொண்டார்.

 கனவுக்கன்னி

கனவுக்கன்னி

இதனால் அன்று வரை விஜயலட்சுமி என்று அறியப்பட்டவர் சில்க் ஸ்மிதா என்ற பெயரில் அழைக்கப்பட்டார். கவர்ச்சியானத் தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்து 80களில் தென்னிந்தியத் திரைப்பட உலகின் கனவுக்கன்னியாக வலம்வந்தார்.

 கால் மேல் கால் போட்டதால் சர்ச்சை

கால் மேல் கால் போட்டதால் சர்ச்சை

கவர்ச்சி நடிகை என்பதால் பலரும் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதை தவிர்ப்பதற்காகவே, அனைவரிடமும் விலகியே இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில்க் ஸ்மிதாவை தலைக்கனம் பிடித்தவர் என்று பத்திரிக்கைகள் எழுதின. அவ்வாறு தலைக் கனத்தை காட்டுவதுதான் தனக்கான பாதுகாப்பு என்று அவர் கருதினார். நடிகர் சிவாஜிகணேசன் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் ஒருமுறை சர்ச்சையில் சிக்கினார்.

 மர்ம மரணம்

மர்ம மரணம்

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி என்றும், மேலும் பல சூழ்நிலைகளும் இவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

 ஹிட்டான டர்டி பிக்சர்

ஹிட்டான டர்டி பிக்சர்

இவருடைய மறைவிற்குப் பிறகு "தி டர்டி பிக்சர்" என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

 அழியாத சுவடு

அழியாத சுவடு

திரையுலகில் சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின் அபார நடனத்திறமையும், கண்களின் வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சிக்கு என்று தனி நடிகை தேவைப்படாமல் பெரும்பாலான ஹீரோயின்களை அதை செய்துவிடுவதால், அவரது இடம் நிரப்பப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+