தனி ஆவர்த்தனம் நடத்துகிறார்.. ப.சிதம்பரம் மீது ஞானதேசிகன் பாய்ச்சல்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனி கோஷ்டியாக செயல்படுவது குறித்து தலைவர் பதவியில் இருந்து விலகிய ஞானதேசிகன் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஞானதேசிகன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் மேலிடம் மீது அடுக்கடுக்கான புகார்களை அடுக்கினார்.

அப்போது, சில மாவட்டத் தலைவர்கள் நிர்வாகிகள் கூட்டத்துக்கு வரவில்லை என்றும் ஞானதேசிகன் புகார் கூறினார். இதனைக் குறிப்பிட்டு, அந்த தலைவர்கள் அனைவரும் சிதம்பரம் கோஷ்டியா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஞானதேசிகன், சிதம்பரம் பெயர் உங்களுக்கு தோன்றுகிறது.. உங்களுக்கு இன்னும் யார் யார் பெயரெல்லாம் வருகிறதோ அதையெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ப. சிதம்பரம் அவர் தனியாக பொதுக்கூட்டங்களை நடத்திக் கொண்டு ஒரு கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் ஞானதேசிகன்.












Click it and Unblock the Notifications