போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு திரும்புங்கள்: சட்டமாணவர்களுக்கு ஹைகோர்ட் அறிவுரை
சென்னை: டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்ய கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வரும் மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு திரும்ப வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யப் போவதாக வந்த தகவலை அடுத்து, அக்கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், கோட்டை நோக்கி பேரணி என்று பலகட்ட போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நேற்று போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீசார் மீது சட்டக் கல்லூரி மாணவர்கள் கல் வீசினர். இதனால் பாரிமுனை பகுதி நேற்று போர்களம் போல காணப்பட்டது. போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவசர வழக்கு
இந்த நிலையில், வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் என்பவர் நீதிபதிகள் எஸ்.கே.அக்னி கோத்திரி, எம். வேணுகோபால் ஆகியோர் முன்பு ஆஜராகி சென்னை சட்டக் கல்லூரி மானவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க கேட்டும் இந்த கோர்ட்டில் மாணவர் சார்பில் வழக்கு தொடர உள்ளோம். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்.

கால அவகாசம் தேவை
அதற்கு நீதிபதிகள், கல்லூரியை இடம் மாற்றம் செய்யக் கூடாது என்று தலைமை செயலாளரை சந்தித்து நேற்று தான் மனு கொடுத்து உள்ளீர்கள் அந்த மனு மீது அரசு முடிவு எடுக்க கால அவகாசம் வேண்டும். உங்கள் கோரிக்கை நிராகரிக்கும் பட்சத்தில் இந்த கோர்ட்டை அணுகலாம். அதற்குள் இன்றே கோர்ட்டை அனுகியதை ஏற்க முடியாது.

வகுப்பறைக்கு திரும்புங்கள்
முதலில் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு வகுப்பறைக்கு திரும்புங்கள். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த நீதிமன்றத்திற்கு வாருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர் .

போலீஸ் குவிப்பு
இதனிடையே சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை தலைவர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றை மாணவர்கள் முற்றுகையிடப்போவதாக செய்திகள் வந்ததை தொடர்ந்து இரு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications