சாமி சிலைகளை இருட்டறையில் பூட்டி வைக்க இந்து அறநிலையத்துறை எதற்கு? ஹைகோர்ட் அதிரடி
சாமி சிலைகளை இருட்டறையில் பூட்டி வைக்க இந்து அறநிலையத்துறை எதற்கு? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சாமி சிலைகளை இருட்டறையில் பூட்டி வைக்க இந்து அறநிலையத்துறை எதற்கு? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதின்றம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் சிலைகளை அறைகளுக்குள் வைத்து பாதுகாக்க இந்து அறநிலையத்துறை எதற்கு? என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சிலைகள் என்பது பொதுமக்கள் வழிபட என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வழிபடுவதற்கான சிலைகளை அறைகளுக்குள் வைத்து பாதுகாக்கவா அறநிலையத்துறை? என சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் பழங்கால கோயில் சிலைகளை பாதுகாப்பது குறித்து வரும் 23ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications