For Daily Alerts
Just In
திருச்சி விமான நிலையத்தில் 108 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் - சுங்க அதிகாரிகள் அதிரடி
திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை வந்த துபாய் விமானத்தில் கழிவறையில் 1.50 கிலோ தங்கம் சிக்கியது- வீடியோ
திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் 108 கிராம் தங்கம் கடத்தல் தங்கத்தினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான மதுரையைச் சேர்ந்த மீராமொய்தின் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் 108 கிராம் தங்கத்தினை கோலாலம்பூரிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றினை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து மீரா மொய்தினிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ 3.35 லட்சம் என கூறப்படுகிறது.
English summary
Customs officials seized 108 gram of gold worth Rs 3.35 lakh in Trichy Airport. Officials are investigating who has kidnapped gold from Kolalampur.
Story first published: Saturday, March 24, 2018, 10:32 [IST]