தலித் இளைஞர் சங்கர் ஆணவகொலை வழக்கு: கவுசல்யா தாய், தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆதிக்க ஜாதியினரால் தலித் இளைஞர் சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தந்தை, தாய், மாமன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞரான சங்கர், நடுரோட்டில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
ஜாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக, பெண்ணின் குடும்பத்தார், கூலிப்படையை ஏவி அவரை வெட்டி படுகொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வெளியான காட்சிகள்
இந்த தாக்குதலின்போது சங்கரின், மனைவி கௌசல்யா பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாய், தந்தை கைது
இதுகுறித்து, உடுமலைபேட்டை போலீஸார், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் மதன், மதனின் கூட்டாளிகளான பழனி, மணிகண்டன், திண்டுக்கலை சேர்ந்த ஜெகதீசன், அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 9 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்..

குண்டர் சட்டம்
இந்நிலையில், தற்போது, கவுசல்யாவின் தந்தை, தாய், மாமன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பலர் மீதும்
இந்த வழக்கில் இன்னும் சில குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications