பயனாளிகளின் ரகசியத்தை வெளியிட கோரிய மத்திய அரசு.. விடாப்பிடியாக மறுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம்
வாட்ஸ் ஆப்பில் உள்ள எண்டு- எண்டு என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு முறையை நீக்கும்படி மத்திய அரசு வைத்த கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்து இருக்கிறது.
சென்னை: வாட்ஸ் ஆப்பில் உள்ள எண்டு- எண்டு என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு முறையை நீக்கும்படி மத்திய அரசு வைத்த கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்து இருக்கிறது.
இந்தியாவில் குழந்தை கடத்தல் வதந்தி பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதனால் இதுவரை மட்டும் 33 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் நிறைய முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் கூட வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

எத்தனை முறை
இதற்காக வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. பார்வேர்ட் மெசேஜ்களை கண்டுபிடிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும். புகைப்படம் , வீடியோ, எதுவாக இருந்தாலும் ஐந்து முறை மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும்.

எண்டு- எண்டு என்கிரிப்ஷன் என்றால் என்ன
எண்டு- எண்டு என்கிரிப்ஷன் என்ற வசதி வாட்ஸ் ஆப்பில் சில வாரங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. மக்களின் பாதுகாப்பும் கருதியும், அந்தரங்கம் கருதியும் இந்த வசதி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாம் அனுப்பும் மெசேஜ்களை நாம் அனுப்பிய நபரை தவிர வேறு யாரும் இடையில் ஹேக் செய்து படிக்க முடியாது. வாட்ஸ் ஆப் நிறுவனம் கூட படிக்க முடியாது.

கோரிக்கை வைத்தது
இந்த நிலையில் இந்த குழந்தைகள் கடத்தல் வதந்தியை கண்டுபிடிக்க மத்திய அரசு ஒரு திட்டமிட்டது. அதன்படி, வாட்ஸ் ஆப் , இந்த எண்டு- எண்டு என்கிரிப்ஷன் வசதியை எடுத்துவிட வேண்டும். அந்த வசதியை கைவிட்டால் யார், யாருக்கு இந்த குழந்தை கடத்தல் மெசேஜை அனுப்புகிறார்கள் என்று மத்திய அரசால் கண்டுபிடிக்க முடியும் என்று கூறியது.

வாட்ஸ் ஆப் மறுப்பு
ஆனால் இதற்கு தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இது மக்களின் அந்தரங்கத்தை பாதிக்கும் என்று கூறியுள்ளது. இதனால் அந்த குறிப்பிட்ட வதந்தி மெசேஜ் மட்டுமில்லாமல் எல்லா மெஸேஜையும் மத்திய அரசு படிக்க முடியும், இது மக்களுக்கு எதிரானதாக அமையும் என்று வாட்ஸ் ஆப் விளக்கம் அளித்துள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications