நிறைவேறியது மாணவர்களின் கண்ணீர் கோரிக்கை.. ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு!
திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

திருத்தணி: மாணவர்கள் கண்ணீர் விட்டு போராட்டம் நடத்தியதை அடுத்து திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இது மாணவர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மாணவர்கள் கட்டிப்பிடித்து வெளியே விடாமல் கண்ணீர் விடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியராக உள்ள பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் உள்ளனர். கடந்த வாரம் பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன்வாசலுக்கு பூட்டுப் போட்டு பள்ளி முன்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவான் பணியிட மாற்ற உத்தரவு நகலை வாங்கிக் கொண்டு செல்ல முயன்றார். அப்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பகவானின் காலை பிடித்துக் கொண்டு இங்கிருந்து நீங்கள் மாறுதலாகி செல்லக்கூடாது என்று கதறி அழுதுள்ளனர்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிரியர் பகவான் மன அழுத்தத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இவர்களின் வீடியோ தமிழகம் முழுக்க வைரலானது.
இந்த நிலையில் தற்போது ஆச்சர்யமாக திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.மாணவர்கள் கோரிக்கையை ஏற்று பகவான் பணியிட மாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.இது மாணவர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications