அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் - அமைச்சர் அதிரடி அறிவிப்பு: வீடியோ
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சனையாக இருக்கிறது. அதுபோல குழந்தையின்மை பிரச்சனையும் ஒரு சவாலாக உருவாகி வருகிறது. அதனால் தற்போது ஆங்காங்கே பல தனியார் கருத்தரிப்பு மையங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் அந்த மையங்களில் ஏழை மக்கள் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு கட்டணம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 6 தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் இந்த ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மையங்களில் மகளிர் சிறப்பு மருத்துவர், உடலியல் மருத்துவர் மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை மருத்துவர் என சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு இருக்கும் என கூறியுள்ளார்.
அமைச்சர் கூறியது போல, இந்த மையங்கள் உடனே ஆரம்பிக்கப்பட்டால் பல ஏழை மக்கள் சிகிச்சை பெற்று குழந்தைப் பேறு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications