அறிவியல் கண்காட்சி போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி
மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவி நித்திய கல்யாணி வெற்றி பெற்றுள்ளார்.
தேவக்கோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார் நித்திய கல்யாணி. இவர் சென்னை அக்னி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஜுனியர் பிரிவில் பங்கு பெற்றார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நித்திய கல்யாணி, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நித்திய கல்யாணிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது அவருக்கு மெடல், விருது வழங்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களான கார்த்திகேயன், ராஜேஷ், நந்தகுமார், ஜெனிபர், உமா மகேஸ்வரி ஆகியோருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர் முத்து மீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.
15 பள்ளிகளில் இருந்து சுமார் 172 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் கலந்து கொண்ட ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications