ஆளுநர் உரையில் உப்புச் சப்பே இல்லை... ஈவிகேஎஸ், விஜயகாந்த் கருத்து
சென்னை: தமிழக ஆளுநரின் உரை உப்புச் சப்பில்லாததாக இருந்ததாகவும், கானல் நீர் போன்றது எனவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஆளுநர் ரோசைய்யா உரை ஆற்றினார்.
ஆளுநரின் உரை தொடர்பாக கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உப்புச் சப்பில்லை:
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழக ஆளுநர் உரை என்பது சம்பிரதாய சடங்காகவே நடைபெற்று வருகிறது. கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை நிலைநிறுத்துவதன் மூலமே தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று ஆளுநர் உரையில் கூறியிருப்பது பிரச்சினையின் தன்மையை திசை திருப்புவதாகும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பது இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை மூலமாகத் தான் காண முடியும் என்கிற அடிப்படையில்தான் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஆளுநர் உரை என்பது உப்பு சப்பு இல்லாத, வளர்ச்சியை நோக்கமாக கொள்ளாமல் இருக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கானல் நீர்:
ஆளுநரின் உரை தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில், 'வளர்ச்சிக்கான புதிய திட்டங்களோ, மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கான தீர்வே கவர்னர் உரையில் இல்லை. கவர்னர் உரை கானல்நீர் போன்றது,' என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications