முதலில் அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்துங்க... ஆளுநருக்கே அறிவுரை சொல்லும் ஜெயானந்த்
அரசு அலுவலக வளாகங்களில் ஊழல் இல்லாமல் இருக்கின்றனவா என்பதை ஆளுநர் முதலில் உறுதி செய்ய வேண்டும் என்று ஜெயானந்த் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆளுநர் முதலில் அரசு அலுவலகங்கள் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து விட்டு பின்னர் வீடுகளும் கழிவறைகளும் சுத்தமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யலாம் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கடலூரில் வண்டிப்பாளையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு செய்ய சென்றார். இந்நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தபோது அங்கிருந்த கீற்று மறைப்பை திறந்த பார்த்தார்.

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பார்த்ததும் அலறினார். இதையடுத்து அவரை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர்.
இதுகுறித்து பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சசிகலாவின் தம்பி மகன் ஜெயானந்த் திவாகரன் பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பெண் குளித்துக் கொண்டிருந்த கீற்று மறைப்பை பார்வையிட்ட போது ஆளுநருடன் 18 ஆண்கள் இருந்தனர்.
என்னை பொருத்தவரை முதலில் அரசு அலுவலகங்களில் தூய்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு வீடுவீடாக செல்வதும், கழிவறைகளை ஆய்வு செய்வதையும் வைத்துக் கொள்ளலாம் என்று பதிவு செய்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை முதலில் கட்டுப்படுத்திவிட்டு பிறகு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுங்கள் என்ற அர்த்தத்தில் ஜெயானந்த் பதிவிட்டுள்ளார். அவர் அறிவுரை சொல்லும் அளவுக்கு ஆளுநரின் நிலை உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications