ஆளுநர் வருகையால் அவதி... 7 கி.மீ. நடந்தே சென்ற உதகை சுற்றுலா பயணிகள்!
ஆளுநரின் வருகை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை: ஆளுநரின் வருகையினால் நீலகிரி மக்களின் கடும் அவதிக்குள்ளானதையடுத்து, இன்று அவர் சென்னை திரும்பினார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21ம் தேதி அவர் குடும்பத்தினருடன் சென்றார். அடுத்த மாதம் 2ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு விழாக்களில் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் துயர சம்பவம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆளுநர் தனது குடும்பத்தினருடன், ரோஜா பூங்கா, படகு இல்லம் சுற்றி பார்த்து கொண்டிருந்தார். தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் ஆளுநரின் இந்த செயல் நீலகிரி மக்களை கடும் அதிருப்திக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, ஆளுநர் தூத்துக்குடி சம்பவம் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர், கோத்தகிரி வழியாக கார் மூலம் இன்று பிற்பகல் ஆளுநர் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை திரும்பினார்.
முன்னதாக, ஆளுநர் வருகையையொட்டி போக்குவரத்துகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன. இதனால் கோடையை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. குறிப்பாக, தொட்டபெட்டா சதுக்கத்தில் இருந்து தொட்டபெட்டா வரை சுற்றுலா பயணிகள் உட்பட எந்தவித வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும், தொட்டாபெட்டாவிலிருந்து 7 கி.மீ. தொலைவிற்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டது. இது அம்மாவட்ட மக்களையும் சுற்றுலா பயணிகளையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications