ஜெ. உடல் நிலை பற்றி அறிக்கை வெளியிடாத ஆளுநர்.. அப்பல்லோவுக்கு மீண்டும் விசிட்?
அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் மீண்டும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்ததும், மும்பையில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார் வித்யாசாகர் ராவ். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார் வித்யாசாகர் ராவ்.

10 நிமிடங்கள் கழித்து ஆளுநர் முன்பு ஒருமுறை செய்ததை போலவே நிருபர்களிடம் பேசாமல் சென்றுவிட்டார். ஆனால் அவரது முகம் மிகவும் சோர்வாக காணப்பட்டது. இந்நிலையில் கடந்த முறையை போல ஆளுநர், அப்பல்லோ வந்து சென்றதும், ஜெயலலிதா உடல் நிலை குறித்து அறிக்கை வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
ஜெ. உடல்நலம் குறித்து ஆளுநர் அறிக்கை வெளியாகும் என விடியும்வரை தமிழக மக்கள் தூங்காமல் காத்திருந்தனர். ஆனால் இதுவரை ஆளுநர் அறிக்கை அளிக்கவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் மோசமான வதந்திகள் பரவுகின்றன. இதை தடுக்க வேண்டிய பொறப்பிலுள்ள ஆளுநர் அதை செய்யவில்லை.
இந்நிலையில், மீண்டும் ஆளுநர் இன்று மதியம் 3 மணியளவில் அப்பல்லோ வர உள்ளாராம். லேட்டஸ்ட் சிகிச்சை விவரங்களை ஆளுநர் சேகரிக்க உள்ளாராம்.












Click it and Unblock the Notifications